முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயன்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு சி. ஜோசப் விஜய் அவர்களை, நடிகர் சிவகார்த்திகேயன் இன்று அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது, அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பில், இருவரும் சில நிமிடங்கள் கலந்துரையாடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனின் இந்த சந்திப்பு, அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Comments (0)
Add Comment