தமிழ்நாடு பிக்கிள்பால் பிரீமியர் லீக் (TNPPL) சீசன் 2 போட்டியில் பங்கேற்கும் ஊட்டி பைசன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஃபிரான்சைஸ் உரிமையாளராக கீதம், போட்டி விளையாட்டுத் துறையில் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது.
நீலகிரி மலைப்பகுதியின் வேர்களையும், காட்டெருமையின் வலிமை மற்றும் விடாமுயற்சியையும் அடையாளமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஊட்டி பைசன்ஸ் அணி, ஆண்கள் மற்றும் பெண்கள் என மொத்தம் 14 விளையாட்டு வீரர்களுடன் களமிறங்குகிறது. போட்டியில் முழு அர்ப்பணிப்புடன் பங்கேற்பதுடன், ஆடுகளத்திலும் அதற்கு வெளியிலும் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்குவதே அணியின் நோக்கமாக உள்ளது.
கீதத்தைப் பொறுத்தவரை, ஊட்டி பைசன்ஸ் அணியுடனான இந்தப் பயணம் விருந்தோம்பல் துறையைத் தாண்டிய புதிய அத்தியாயமாக அமைந்துள்ளது. வளர்ந்து வரும் பிக்கிள்பால் விளையாட்டுக்கு பங்களிப்பதுடன், சமூகம், கலாச்சாரம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஓர் அணியை உருவாக்கும் வாய்ப்பாகவும் இந்த முயற்சியை கீதம் பார்க்கிறது.
இதுகுறித்து கீதம் தரப்பில், “ஊட்டி பைசன்ஸ் அணி மூலம் புதிய களத்தில் எங்கள் பயணத்தைத் தொடங்குகிறோம். கடுமையாகப் போட்டியிடும் ஓர் அணியை உருவாக்க வேண்டும், நீலகிரி மக்களின் பெருமையைப் பிரதிபலிக்க வேண்டும், போட்டியைத் தாண்டியும் மக்கள் தங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய ஓர் அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிபிஎல் சீசன் 2-க்காக தயாராகி வரும் ஊட்டி பைசன்ஸ் அணி, “கூட்டமாக எழுவோம், கடுமையாகப் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்!” என்ற கொள்கையுடன் களமிறங்கத் தயாராகியுள்ளது.
கீதம் வெஜ் வழங்கும் ஊட்டி பைசன்ஸ், பிக்கிள்பால் விளையாட்டில் தனது முதல் சீசனிலேயே தனக்கென ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கும் நோக்கத்துடன் போட்டியை எதிர்கொள்கிறது.
