100 நாட்களைக் கடந்தும் வெற்றிநடை போடும் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’!

21

‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு செய்து, ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

விறுவிறுப்பான திரைக்கதை, அதிரடியான ஆக்சன் காட்சிகள் மற்றும் சக்திவாய்ந்த நடிப்பால் ரசிகர்களின் மனதை வென்ற இப்படம், வெளியான நாள் முதல் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த 100 நாள் சாதனையை மேலும் சிறப்பாக்குவது என்னவென்றால், படம் JioHotstar மற்றும் Netflix என இரண்டு முன்னணி ஓடிடி தளங்களில் வெளியாகியிருந்த போதிலும், ரசிகர்கள் தொடர்ந்து திரையரங்குகளுக்குச் சென்று படத்தை ரசித்து வருகின்றனர்.

ஆதித்யா தர் கதை எழுதி, இயக்கி, தயாரித்துள்ள இப்படத்தை ஜோதி தேஷ்பாண்டே மற்றும் லோகேஷ் தர்இணைந்து தயாரித்துள்ளனர். Jio Studios வழங்க, B62 Studios நிறுவனம் தயாரித்துள்ள ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’, கடந்த மார்ச் 19, 2026 அன்று இந்தியா முழுவதும் வெளியாகி, இந்தி திரையுலகின் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.